Shell Programming Blog Shell Programming Blog

Wednesday 25 April 2012

Unknown | 10:28 | Be the first to comment!



கடல்குதிரைகள் பற்றிய அறிய தகவல் !!!!


"உலகத்திலேயே கடல் குதிரை தான் ஆண் வர்க்கத்தில் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று கொள்ள முடியும்"

கண்களை எந்தப் பக்கமும் திருப்புதல், குதித்து குதித்து ஓடும் ஒருவகை மீன் இனம், குதிரை போன்ற முக அமைப்பு, குரங்கு போன்ற வால், ஆண் இனங்கள் இனப்பெருக்கம் செய்தல் இப்படியாக பல்வேறு சிறப்புகளையுடைய அரியவகை கடல்வாழ் உயிரினமான கடல் குதிரைகள் பல்வேறு காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருவதை அரசு தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடலமைப்பை பொருத்தவரை நன்கு நீண்டு வளையங்களால் அமைந்தது போன்றும் வாய் நீண்டு குழல் போலவும் மார்புப் பகுதி சற்று அகன்று விரிந்தும் காணப்படுகிறது. உடலில் பக்கவாட்டுக் கோடுகள் மற்றும் நீண்ட புள்ளிகள் தென்படுகின்றன. சுமார் 6 செ.மீ முதல் 17 செ.மீ வரை நீளமும் எடை 4 கிராம் முதல் 14 கிராம் வரையும் இருக்கிறது.

பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை (200) ஆண்களின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் விட்டுவிடும். அதனை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல நன்கு பேணி ஆறு வாரங்கள் பாதுகாத்து குஞ்சுகளாகப் பொரிக்கின்றன. குஞ்சுகளின் எண்ணிக்கையும் 50 முதல் 100 வரை இருக்கும். பிறக்கும் குஞ்சுகளின் நீளம் ஏறத்தாழ ஒரு செ.மீட்டராக இருந்தாலும் பெற்றோரின் பாதுகாப்பு அதிகமாகவே இருக்கும்.

உலகில் மொத்தம் 35 வகையான கடல் குதிரைகள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் ஆழம் குறைந்த கடல் பகுதிகளான கடற்புற்கள் பவளப்பாறைகள் நிரம்பிய இடங்களில் வாழ்கின்றன இவற்றின் முக்கிய உணவு இறால்களாகும். கடல் குதிரைகள் தங்களின் வாலைப் புல்களில் கட்டிக்கொண்டு நிற்க முடியும். இதன் உடல் கடினமான எலும்பு போன்ற பொருள்களினால் ஆன போதிலும் நண்டு பெங்குவின் முதலியன இவற்றை வேட்டையாடி உண்கின்றன. பெரும்பாலான மீன்கள் கடல் குதிரையைக் கண்டுகொள்வதில்லை.கடல் குதிரைக்குக் கடலில் உள்ள விரோதிகளைக் காட்டிலும் நிலத்தில் உள்ள விரோதியான மனிதன் தான் மிகுந்த தொல்லை கொடுக்கிறான்.


மீன் இனத்தைச் சேர்ந்த உயிரினம்தான் கடல்குதிரை. பார்ப்பதற்கு முதலைக் குட்டியைப் போலிருக்கும். ஆண் கடல் குதிரையின் வாலின் கீழே பை போன்ற அமைப்பு இருக்கும். ஆண் கடல் குதிரைகளின் இந்தப் பையில்தான் பெண் கடல் குதிரைகள் முட்டையிடுகின்றன. முட்டைகள் பொரிவதும் வெளிவரும் குஞ்சுகள் சிறிது காலம் வளர்வதும் இந்தப் பையில்தான். முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும் நேரத்தில் அப்பா கடற்குதிரைக்கு பிரசவ வலி வரும். அப்போது
அது நீருக்கடியில் உள்ள புதற்களுக்கிடையே கிடந்து மிகவும் சிரமப்படும். உடலை முன்னும் பின்னுமாக அசைத்து வளைக்கும். இப்படி வளையும்போது பையின் தசைகள் விரிவடையும். ஒவ்வொரு முறை வளையும்போதும் ஒவ்வொரு குஞ்சு வெளிவரும்.

இதில் பிரச்சனை என்னவென்றால் கடல்குதிரையின் இனப்பெருக்க வேகம் மிகவும் குறைவு. மனிதர்களுக்கு வேகத்தைத் தரும் கடல் குதிரைகளுக்குத் தான் வேகம் வருவதில்லை. இப்படியே போனால் எதிர்காலத்தில் கடல் குதிரைகள் என்கிற இனம் என்ன ஆகுமென்று யாருக்கும் தெரியாது.

Unknown | 10:26 | Be the first to comment!



பழைய சாதத்துல உள்ள மருத்துவ குணங்கள் பற்றிய அறிய தகவல் !!!! 

நோய் எதிர்ப்பு சக்தி,உடல் சுறுசுறுப்பாக, பன்றிக் காய்ச்சல்,எந்தக் காய்ச்சலும் அணுகாது!, உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி குணப்பட, சிறு குடலுக்கு நன்மை, அலர்ஜி, அரிப்பு போன்றவை சரியாக, சட்டென்று இரத்த அழுத்தம் கட்டுக்குள் வர, உடல் எடையும் குறைய..
முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர்.

தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

"காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.

மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".

கொஞ்சம் சைனஸ் நோய் உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது ஏன் என்றால் பழைய சாதம் உடலுக்கு அதிகமான குளிர்ச்சி தரும் 

Unknown | 10:22 | Be the first to comment!

இஸ்லாமியர்கள் கால்நடைகளை வேதனை தரும் முறையில் அறுப்பது ஏன்?

மாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்:

கேள்வி

இஸ்லாமியர்கள் கால்நடைகளை – இரக்கமற்ற முறையில் சித்திரவதை செய்து கால்நடைகளுக்கு வேதனை தரும் முறையில் அறுக்கிறார்களே! இது சரியா?
பதில்:

‘ஸபிஹா’ என்றழைக்கப்படும் – இஸ்லாமியர்கள் கால்நடைகளை அறுக்கும் விதம் குறித்து மக்களில் பொரும்பாலோரிடமிருந்து விமரிசனங்கள் வருகின்றன. இந்த கேள்விக்கு பதிலளிக்கும் முன் – மேற்படி பொருள் குறித்து – ஒரு சீக்கியருக்கும் – ஒரு இஸ்லாமியருக்கும் நடந்த உரையாடலை உங்களுக்கு சொல்லி விடுறேன்.

சீக்கியர் ஒருவர் இஸ்லாமியரைப் பார்த்து கேட்டார்: நாங்கள் ஆடு மாடுகளை அறுக்கும் போது – அதன் பின்புற மண்டையில் ஒரே போடு போட்டு – கொன்று விடுகிறோம். அதுபோல செய்யாமல் – நீங்கள் ஏன் அவைகளின் கழுத்தை அறுத்து – சித்ரவதை செய்து கொல்கிறீர்கள்?

மேற்படி கேள்வி கேட்கப்பட்ட இஸ்லாமியர் சொன்னார்: கால்நடைகளை பின்புறம் இருந்து தாக்கிக் கொல்வதற்கு உங்களைப் போல நாங்கள் ஒன்றும் கோழைகளல்ல. நாங்கள் தைரியசாலிகள். அதனால்தான் முன்பக்கமாக அதன் கழுத்தை அறுத்து கொல்கிறோம் என்று.

மேற்படி சம்பவம் வேடிக்கையாக இருந்தாலும் – ‘ஷாபிஹா’ என்றழைக்கப்படும் – இஸ்லாமியர்கள் கால்நடைகளை அறுக்கும் விதம்தான் மனிதத்தன்மை உள்ளது மற்றும் அறிவியல் ரீதியாக சிறந்த முறை என்பதை கீழக்காணும் விபரங்கள் நமக்கு தெரிவிக்கும்.

1. இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும் விதம்.

அரபிமொழியில் ‘ஸக்காத்’ என்றால் ‘தூய்மை’ என்ற பொருள். மேற்படி சொல்லிலிருந்து ‘ஸக்கய்தும்’ (தூய்மைப்படுத்துதல்) என்ற வினைச்சொல் பெறப்பட்டது. இஸ்லாமிய முறையில் காலந்டைகளை அறுப்பதற்கு கீழக்காணும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

A. கால்நடைகளை அறுக்க பயன்படும் கத்தி அல்லது வாள் மிகக் கூர்மையானதாக இருக்க வேண்டும்.

கால்நடைகள் மிகக் கூர்மையான கத்தி அல்லது வாளால் அறுக்கப்பட வேண்டும். அறுக்கும் போது கால்நடைகள் வலியை உணராதவாறு அல்லது மிகக் குறைவாகவே வலியை உணருமாறு – மிக வேகமாக அறுக்கப்பட வேண்டும்.

B. ‘ஸபிஹா’ என்றால் அரபிமொழியில் அறுத்தல் என்று பொருள்படும்.

மேற்படி இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும்போது கழுத்தில் உள்ள மூச்சுக் குழாயும் இரத்தக்குழாயும் ஒரே சமயத்தில் அறுக்கப்பட்டு – கால்நடைகளை உயிரிழக்கச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது கால்நடைகளின் நரம்பு மண்டலம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

C. அறுக்கப்பட்ட கால்நடைகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழியும்படிச் செய்ய வேண்டும்.

இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்வதன் நோக்கம் ?

அறுக்கப்பட்ட கால்நடைகளின் இரத்தம் – இரத்தக் குழாய்களில் தங்கி கிருமிகள் உருவாகாமல் இருக்க வேண்டியாகும். கால்நடைகளை அறுக்கும் போது தண்டுவடம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும். தண்டுவடும் துண்டிக்கப்படுவதால் – இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு – இதயம் நின்று போகக் கூடிய நிலை உண்டாகலாம். இதனால் இதயத்தில் உள் இரத்தம் இரத்த நாளங்களில் தங்கிவிடக் கூடும்.

D. கிருமிகளும் – நோய்க்கிருமிகளும் உருவாக காரணமாக அமைவது இரத்தமே !

கிருமிகளும் – நோய்க்கிருமிகளும் உருவாக காரணமாக அமைவது உடலில் உள்ள இரத்தமே. இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும்போது – கால்நைடகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்யப்படுவதால் நோய்க்கிருமிகள் உருவாவதில்லை.

E. .இஸ்லாமிய முறையில் அறுக்கப்படும் கால்நடைகளின் இறைச்சி நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.

இஸ்லாமிய முறையில் அறுக்கப்படும் இறைச்சியில் இரத்தம் கலந்து விடாமல் இருப்பதால் – வேறுவிதமாக கொல்லப்படும் கால்நடைகளின் இறைச்சியைவிட இஸ்லாமிய முறையில் அறுக்கப்படும் இறைச்சி நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.

F. இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும்போது – கால்நடைகள் வலியை உணர்வதில்லை.

இஸ்லாமிய முறையில் கால்நடைகள் அறுக்கப்படும்பொழுது – கால்நடைகளின் கழுத்து நரம்புகள் மிக வேகமாக அறுக்கப்பட்டு வலியை மூளைக்குக் கடத்திச் செல்லக்கூடிய நரம்பு மண்டலம் துண்டிக்கப்பட்டு விடுவதால் அறுக்கப்படும் கால்நடைகள் வலியை உணர்வதில்லை. இரத்தம் உடலிலிருந்து வெளியேறுவதால் – உடலில் உள்ள சதைப்பாகங்கள் – இரத்தம் இன்றி சுருங்கி விடுவதால் ஏற்படும் மாற்றத்தால் தான் அறுக்கப்பட்ட மிருகங்கள் – துள்ளுவதாகவும் – துடிப்பதாகவும் நமக்குத் தெரிகின்றதேத் தவிர வலியால் அல்ல.

மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன் அனைத்து மதத்தவர்களும்

Unknown | 06:50 | Be the first to comment!

கேரட் பற்றிய தகவல் !!!!

கேரட்டில் உள்ள ‘ஏ’ வைட்டமின் கண்பார்வைக்கு நல்லது என்று தெரியும். இன்னொரு அதிசயமும் இருக்கிறது. கேரட்டை இரண்டு துண்டாக வெட்டி அதன் உள்பகுதியை உற்று நோக்குங்கள். கிட்டத்தட்ட அது நம் கண்ணின் அமைப்பு போலவே இருக்கும். கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் தான் தருகிறது. அந்த பீட்டாகேரட்டின்தான் மனிதக் கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது. வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டைக்கூட பீட்டாகேரட்டின் தடுத்து நிறுத்துகிறது. பீட்டாகேரட்டின் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் கூட அது கேரட்டைப் போல பலன் தருவதில்லை என்பதும் உண்மை.

கேரட் ஆப்கானிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்டது. பல நூற்றாண்டுகளில் பலவித மாறுதல்களுக்குள்ளான காரட் துவர்ப்பு நீக்கப்பட்டு, இனிப்புடன் கிடைக்கக்கூடிய காய் வகைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

கேரட் செடியின் வேர்ப் பகுதியில் வளரக்கூடியது. ஆரஞ்சு, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் கேரட் கிடைக்கின்றது. கேரட் பச்சையாகக் கூட சாப்பிடக்கூடியது.

பொதுவாக அனைத்து வீடுகளில் சமைக்கக் கூடிய கேரட்டில் அடங்கியுள்ள சத்துக்கள் பற்றி விவரங்களை இப்போது பார்ப்போம்.

100 கிராம் கேரட்டில் உள்ள சத்துக்கள்:

சக்தி 41 கலோரிகள்

கார்போ ஹைட்ரேட்ஸ் 9 கிராம்
சர்க்கரை 5 கிராம்
நார்சத்து 3 கிராம்
கொழுப்புச் சத்து 0.2 கிராம்
புரோட்டின் 1 கிராம்

வைட்டமின் A - 93% (835 மைக்ரோ கிராம்)
பீட்டா கரோட்டின் - 77% (8285 மைக்ரோ கிராம்)
வைட்டமின் B1 - 3% (0.04 மில்லி கிராம்)
வைட்டமின் B2 - 3% (0.05 மில்லி கிராம்)
வைட்டமின் B3 - 8% (1.2 மில்லி கிராம்)
வைட்டமின் B6 - 8% (0.1 மில்லி கிராம்)
வைட்டமின் B9 - 5% (9 மைக்ரோ கிராம்)
வைட்டமின் C - 12% (7 மில்லி கிராம்)

கால்சியம் - 3% (33 மில்லி கிராம்)
இரும்புச் சத்து - 5% (0.66 மில்லி கிராம்)
மங்கனீஷ் - 5% (18 மில்லி கிராம்)
பாஸ்பரஸ் - 5% (35 மில்லி கிராம்)
பொட்டாசியம் - 5% (240 மில்லி கிராம்)
சோடியம் 2.4 மில்லி கிராம்

இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை எனலாம். இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை.கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.
வைட்டமின் "ஏ" சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது.
இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.
இவை இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது. மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.
கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.
பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பக புற்று நோய் முற்றாமல் காத்துக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின் புளோரிடாவில் புற்று நோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.
கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்று நோயிலிருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் "ஏ" விலிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம், புற்று நோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும். கேரட் சருமத்திற்கு பொலிவைத் தந்து சுருக்கத்தை நீக்குகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 
இது பற்றி பிலடெல்பியாவிலுள்ள பாக்ஸ் சேஸ் புற்று நோய் மையத்தின் ஆராய்ச்சியாளர் சாண்ட்ரா பெர்ணாண்டஸ் கூறியதாவது: இந்தக் காய்களிலுள்ள சத்துக்கள் புற்று நோயை ஆரம்ப நிலையில் மட்டுமே அழிக்குமென்றும், நோய் முற்றிய புற்றுச் செல்களை அழிக்காது என்றும் தெரிவித்தார்.

Unknown | 06:48 | Be the first to comment!

எதனால் மாரடைப்பு வருது?

உலகிலேயே அதிகமாக மனிதர்கள் இறப்பதற்கு முதல் காரணம் மாரடைப்பு, ஏழை, பணக்காரன், ஆண், பெண் என்ற வித்தியாசம் ஏதுமின்றி எல்லோரையும் தாக்குகிறது இந்த “ஆட்கொல்லி” இருதய நோய். மாரடைப்பு வருவதற்கு காரணங்கள்.

* அதிக ‘கொலஸ்ட்ரால்’ ரத்த தமனிகளில் கொழுப்புகள், ட்ரைகிளிசரைடுகள் அதிகமாக இருப்பது பரம்பரை, புகைபிடித்தல், அதிக இரத்த அழுத்தம் இன்றைய அவசர வாழ்க்கையில் ஏற்படும் மன இறுக்கம், நீரிழிவு நோய் போன்றவை.

* இருதய நோய்களை வருமுன் காப்பது நல்லது. இதில் முக்கிய பங்கு வகிப்பது உணவு. இருதய நோயை சமாளிக்க பல வழிகளில் முனைய வேண்டும்.

* சரியான உணவு, உடற்பயிற்சி, நோய் வந்தால் சரியான சிகிச்சை, வாழ்வுமுறைகளில் மாற்றம், மன நிலையில் அமைதி என்ற பல வழிகளில் இந்த நோயை சமாளிக்க வேண்டும்.

* ஆயுர்வேதத்தில் இருதய நோய்களுக்கு உன்னதமான மருந்துகள் உள்ளன. இம் மருந்துகளுடன், உணவுக்கட்டுப்பாடும் சேர்ந்தால் சிகிச்சை பலனளிக்கும். முதலில் உணவுமுறைகளைப் பார்ப்போம்.

* சாப்பிடும் உணவு எவ்வளவு கலோரிகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வயதாக வயதாக, ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு, 1500 கலோரிகள் போதுமானது. எல்லோரும் அறிந்தது உணவில் கொழுப்பை குறைப்பது நல்லது.

* வனஸ்பதி, வெண்ணெய் இவற்றை அறவே தவிர்க்கவும். சிறிதளவு உருக்கிய நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

* நார்ச்சத்தும், மாவுச்சத்தும் மிகுந்த கோதுமை, அரிசி, பீன்ஸ், ஒட்ஸ் மாவு, காய்கறி, பழங்கள் போன்ற உணவுகள் நல்லவை. சமையலில் ஆலிவ் எண்ணெய், தானிய எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் இவற்றை மாற்றி மாற்றி உபயோகிக்கவும்.

* 4 பேர் உள்ள குடும்பத்திற்கு மாதம் 2 கிலோ எண்ணெய்க்கு மேல் உபயோகிக்க கூடாது. இல்லை, ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் போதுமானது.

* உணவில் கண்டிப்பாக உப்பைக் குறைக்கவும். 2400 மி.கி. உப்பு (சோடியம்) ஒரு நாளுக்கு போதுமானது. முடிந்தால் இந்த அளவையும் குறைக்கவும்.

உடல் எடையை அதிகரிக்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஓர் ‘வளையம்’ போல் வயிற்றை சுற்றி கொழுப்பு இருப்பவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்புகள் அதிகம். சுறுசுறுப்பாக இருங்கள்.

Friday 20 April 2012

அல்லாஹ் பிச்சை அவ்லியா!!!!

Unknown | 18:23 | Be the first to comment!


அல்லாஹ் பிச்சை அவ்லியா... அல்லாஹ் பிச்சை அவ்லியாவைப்பற்றி தென் மாநிலப் பகுதிகளில் அறியதவர்கள் இருக்கமாட்டார்கள். தங்களின் கோரிக்கைகள், தேவைகள் நிறைவேறுவதற்காக குடும்பம் குடும்பமாக படையெடுத்துச் செல்வதைப்பற்றி நமது நண்பர் ஒருவர் சொன்ன செய்திகள் மிகவும் வியப்பைத்தந்தது. அந்த மகானின் கப்றை தரிசிப்பதற்காக மனைவி,மகன்,மகள் தொல்லை தாங்காது அவரும் ஒருநாள் பேருந்து ஒன்றில் குடும்ப சகிதமாக புறப்பட்டுச் சென்றார். அவரே அது பற்றிச் சொல்வதை நாமும் கேட்போம். சோலைக்கரைக்குச் செல்லும் பேருந்தில் நடத்துனரிடம் ‘சோலைக்கரைக்கு மூணு ஃபுல் ஒரு ஆஃப்’ என பயணச்சீட்டு கேட்டேன். எங்கே இறங்கணும் ? நடத்துனர் கேட்டதும் நான் தடுமாறினேன். இது எங்கள் முதல் புனித யாத்திரை! மீண்டும் கேட்டார். பெரிசா? சிறுசா? கண்டக்டர் ஐயா ! பெரிசும் சிறுசும் தெரியாது. அல்லாஹ் பிச்சை தர்ஹாவிலே இறங்கணும். ‘அது சின்ன பள்ளிவாசல்’. நடத்துனர் டிக்கட் தந்தார். ‘சின்ன பள்ளி வாசல்’ வந்தாச்சு ! நடத்துனர் சப்தம் கொடுத்தார். எங்களோடு வேறு சில பக்தர்களும் இறங்கினார்கள். அல்லாஹ் பிச்சை அவ்லியா அடங்கியுள்ள அந்ந பரிசுத்தமான மணலில் கால் பட்டதும் தலையில் இதுவரை துணி எதுவும் போடாது வந்த என் மனைவி சாரி முந்தானையால் பக்திப் பரவசத்தோடு தலையை மறைத்தாள். பக்கத்திலிருந்த ஒரு பெட்டிக் கடையில் வழி விசாரித்தேன். அல்லாஹ் பிச்சை அவுலியா தர்ஹா எந்தப்பக்கம்? ஊதுபத்தி, சாம்பிராணி எல்லாம் வேண்டாமா ? ‘வேணும்’ எனறாள் என் மனைவி. அவள் உயரத்தில் ஒரு வாழைப்பழக் குலை நேர்ச்சை நேர்ந்திருந்தாள். அது நினைவுக்கு வந்ததும் அவரிடம் இந்த அம்மா உயரத்துக்கு ஒரு குலை கிடைக்குமா? கடைக்காரன் அவனது கண்களால் எனது மனைவியின் உயரத்தை அளவெடுத்தான். இந்த உயரத்திலே கிடைக்காது அத்தா! உடனே நான் என் மனைவியிடம் ‘ நீ இந்த அவ்லியா கராமத்தைக் கொண்டு கிடைக்குமெனச் சொன்னியே! அதற்கவள் கதீஜா பாட்டி தான் ‘யார் எதைக் கேட்டாலும், எது வேணும்ணாலும் இங்;கே கிடைக்கும்ணு சொன்னாங்க! கிடைக்கல்லைன்னா என்ன செய்யறது? ‘வேறு பார்ப்போம்.’ கடைசியாக ஆள் உயரத்துக்கு பழக்குலை! அவளது உயரத்தில் ஒரு பழக்குலைக்காக பல கடைகள் ஏறி இறங்கினது தான் மிச்சம். கிடைக்கல்ல. கடைசியில் எனது இளய மகன் ஒரு யோசனை கூறினான். வாப்பா! உம்மா உயரத்துக்கு இரண்டு மூணு குலைகள் வாங்கிக் கொடுத்தால் என்ன? வெரிகுட்! நல்ல யோசனை! அவ்லியா ஏத்துக்கிடமாட்டாங்களே! இது நீண்ட நாள் வேண்டுதலல்லவா? என்று என் மனைவி முணுமுணுத்தாள். ‘ ஒரே குலையா கிடைக்காதா ? என்றாள். ‘ கிடைக்கலியே!’ என்ன செய்வது ? சரி அடுத்தகடைக்குப் போவோம். என்றாள். குலை தேடுவதிலே ஒரு மணி நேரம் ஓடிவிட்டது. வேறு வழியே இல்லாம அவளுடைய விருப்பமும் இல்லாம மூன்று பழக்குலைகள் வாங்கினோம். மூன்று பழக்குலைகளையும் நீளமாக சேர்த்து வைத்தேன். ஒரு கயிற்றுத் துண்டால் எனது இளைய மகன் அளவெடுத்தான். முக்கால் அடி அவளைவிட குலைகளுக்கு உயரம் ஜாஸ்தி. நான் மனைவியின் முகத்தைப் பார்த்தேன்.அவள் முகத்தில் கவலை கடந்தைக் கூடு போல தொங்கி நின்றது. அவளுக்கு அது விருப்பமே இல்லை. வேறு வழியில்லாம எங்க கூட வந்தாள். ‘உயரம் கூடினா பரவாயில்லை. குறையக்கூடாது’ என்று அவளை சமாதானம் கூறிக் கொண்டே நடந்தோம். சாப்பாடு சட்டிகளும், பையும்,மூன்று பழக்குலைகளையும் நாலு பேரும் சேர்ந்து தூக்கி அல்லாஹ் பிச்சை அவ்லியாவின் முன் வந்தோம். ஊது பத்தி வாசம்! நெருப்பில் சாம்பிராணி கசியும் வாடை! பூக்களின் வாசம்! அவ்லியா சன்னிதானத்தில் கொடூரங்கள்! சங்கலியால் கட்டிப்போட்டு அணுஅணுவாகச் செத்துக்கொண்டிருக்கும் பைத்தியங்களின் ஓலம் ஒருபக்கம்! வியாவை நாத்தம் மறுபக்கம்! தரையில் உருண்டும்,புரண்டும், துள்ளியும், அலறியும் இறந்து கொண்டிருக்கும் பேய் பிடித்த அப்பாவிப் பெண்களின் அவலங்களும், அவர்களின் வாயிலிருந்து புறப்படும் தூவாடையும்,கெட்ட பேச்சுகளும்! இவைகளுக்கு மத்தியில் வட்ட தாடியின் நடுவே கள்ளக் கண்களிலிருந்து புறப்படும் பார்வையும், உதட்டிலிருந்து அரைகுறையாகப் புறப்படும் யாசீன் சொற்களும்! எங்களைப் பார்த்ததும் ஒரு கும்பல் ஓடிவந்தது. அவ்லியாவின் அனாமத்து வாரிசுகள் என்ன ? என்று அவர்களைப் பார்த்து பயந்தவனாகக் கேட்டேன். நாங்களெல்லாம் தர்ஹா லெப்பைகள்.சிவப்பு குல்லாவும், நீள தலைப்பாகையும், கையிலே தஸ்பீஹ் வைத்து உருட்டுவதையும் பார்த்தாலே தெரியுது. இவர்களெல்லாம் பணம் பிடுங்கும் படா ஆசாமிகள்! அவ்லியாவின் அனாமத்து வாரிசுகள்! என்று. ஒவ்வொருவரும் எங்கள் கையிலிருந்த பழக்குலைகளைப் பிடித்துப்பறித்தார்கள். ஜுப்பா சட்டை மாட்டிக் கொண்ட ஒருவர் தஸ்பீஹ் மணியை உருட்டிக்கொண்டு என் பக்கம் ஓடிவந்தார். என்ன நேர்ச்சைக் கடன் ? என்று என்னைக் கேட்டார். நான் யாரிடத்திலும் கடன் வாங்கலே ஹஸ்ரத்! கடன் காரர்கள் இவங்க தான்! என் மனைவியையும் மகனையும் சுட்டிக் காண்பித்தேன். ‘எனக்கு காலிலுள்ள வெடிப்பு மாறணும்’ என் மனைவி. அரையாண்டு பரீட்சைக்கு நான் பாஸாகணும். என் மகன். சேகுனா அல்லாஹ் பிச்சை அவலியாவுடைய துஆ பரக்கத்தினாலே அம்மா, உங்க காலில் உள்ள வெடிப்பு நீங்கும். தம்பி, நீ அரையாண்டு பரீட்சையிலே கண்டிப்பா ஜெயிக்கவும் செய்வாய். உடனே என் மனைவி லெப்பையிடம் ‘ யாஸீன் ஓதுங்கோ! ‘ என்று கேட்டுக் கொண்டாள். யாஸீனின் விலைவாசி ஏற்றங்கள். ஓதுவோம்! முதல்லெ ‘வெடிப்புக்குள்ள யாஸீனுக்கு பதினொண்ணு ரூபாய், அரையாண்டு பரீட்சையிலே ஜெயிக்க யாஸீனுக்கு ஒன்பது ரூபாய்,. மொத்தம் இருபது ரூபாய் பீஸ்’ கொடுத்துடுங்க. ஓதிவிடுவோம். அதைக் கேட்டதும், ‘ எங்க ஊர்லே யாஸீன் ஓத ஒரு ரூபாய் தானே பீஸ்!’ என்றேன். ‘இங்கே இப்ப நாள் கூடக் கூட ஆள் வரத்து கூடிக்கொண்டே போகுது. தர்ஹா கட்டிடம் கட்டணும். தங்க அறைகள் கட்டணும். இப்படி ரெம்ப ரெம்ப செலவு இருக்குதுங்க! அதனாலே போன மாதத்திலிருந்து ஃபக்கீர் முஹம்மது இப்னு சுல்தானிடமிருந்து கூட்ட உத்தரவு வந்துள்ளது. வேறு வழியின்றி இருபது ரூபாய்க்கு ஒரு சிவப்பு தாளை எடுத்து நீட்டும் போது என்னுடைய கை நடுங்கியது. எதுக்கு கை நடுங்குது தெரியுமா? இது என்னுடைய வியர்வையின் காகித உருவம். அவர் உள்ளே சென்றார்.அவருக்குப் பின்னாலே என் மனைவியும் என் பிள்ளைகளும் சென்றனர். எனக்கு இதுலெ எல்லாம் நம்பிக்கை இல்லை. சாப்பிட ஏதாவது வாங்கி வரலாம்னு எதிர்த்த கடைக்குப் போனேன்.அங்கே வரிசையாகத் தொங்கிக் கொண்டிருந்த யானைகளின் போட்டோக்களின் மீது என் பார்வை சென்றது. எங்கும் யானைகள்! அதிசயமோ அதிசயம் ... இந்த ஊர் மக்களுக்கு யானை மீது ரொம்ப பாசம் போல தெரியுதே! எங்கு பார்த்தாலும் யானையின் போட்டோக்கள்! அத்தா! உங்களுக்கு போட்டா வேணுமா? கடைக்காரன் கேட்டான். ‘எந்த போட்டோ?’ ‘ இந்த பள்ளி வாசலிலே அடங்கியிருக்காங்களே அந்த அவ்லியாவுடைய போட்டேர். எதுக்கும் ஒரு போட்டோ தாங்களேன் என்றேன். வீட்டுக்குள்ளே ஏறக்கூடிய தலை வாசலில் மாட்டணும். பேய் பிசாசு எதுவும் வராது. செல்வம் செழிக்குமத்தா’ என்று அவ்லியாவின் புராணம் பாடிக் கொண்டே ஒரு கூட்டிற்குள் திணித்து ஒரு போட்டோ தந்தார். ஃபிரேம் போட்டு மாட்டுங்க. தினமும் சாம்பிராணி புகை காட்டி பத்தி கொளுத்தி வையுங்கத்தா! விலை ?13.95. ரூபாய். போட்டோ விலையா? ஆம் என்றார். 15 ரூபாய் கொடுத்தேன்.1.05 ரூபாய் திருப்பித்தந்தார். கூட்டிலிருந்து போட்டோவை வெளியே எடுத்தேன். ஒரு யானையின் உருவப்படம். அவர் படம் மாறித் தந்து விட்டாரோ? ‘அத்தா! உங்க கிட்டே அல்லாஹ் பிச்சை அவ்லியா போட்டோ தான் கேட்டேன். நீங்க இந்த யானையோட போட்டோவை கொடுத்திருக்கீங்களே’ ‘நான் மாற்றித்தரவில்லை’ அல்லாஹ் பிச்சை அவ்லியா என்பது இந்த யானையே தான். இந்த அவ்லியாவின் கபுறு தான் இது. என்றார். ஸுப்ஹானல்லாஹ்! மிருகங்களும், வனவிலங்குகளும் அவ்லியாக்களாக மாறிட்டாங்களா? எனக்கு தூக்கி வாரிப் போட்டது. தலை சுற்ற ஆரம்பித்தது. இது வரை அவ்லியாவை மனுஷன்னுல்லே நினைச்சிட்டிருந்தேன். அவ்லியா யானையா மாறிட்டாங்களா? இதை என் மனைவி பிள்ளைங்க தெரிஞ்சா என்ன நினைப்பாங்களோ? எனத் தலையில் அடித்துக் கொண்டு இந்த யானை தர்ஹா எப்படிங்க வந்திச்சு? ஆத்திரத்தோடு கேட்டேன். உங்களுக்கு இது தெரியாதா அத்தா ? தெரியாதே ? திருவிதாங்கூர் மகாராஜா இந்த யானையை பெரிய பள்ளி வாசலுக்கு அன்பளிப்புச் செய்தார்.யானை இங்கு வரும்போது ஆறு வயசு இருக்கும். பெரிய பள்ளிவாசலுக்கு வந்ததும. அல்லா பிச்சை எண்ணு பேர் வெச்சாங்க.இங்கெ வந்து 68 வருஷமாச்சு.போன வருஷம் ஒரு கோயில் கொடைக்கு இரவு யானை போச்சுது. வாறெ வழியிலெ நோய் பிடிச்சுது. எப்படியோ இங்கு வந்து சேர்ந்திட்டுது. இரவு ஒண்ணுமே சாப்பிடலை. இரண்டு மணிக்கு மௌத்தா போச்சுது. பல ஊர்களிலிருந்தும் முஸ்லிமகளும் முஸ்லிமல்லாதவர்களும் படைபடையா வந்து குவிஞ்சிட்டாங்க. பெரிய பள்ளிவாசல் யானையில்லே! அத்தனை பேரும் சோகமும் கண்ணீருமா நின்று கொண்டிருந்தாங்க. ஒரு முஸ்லிமை அடக்கம் செய்வது போல அடக்கம் செய்தாங்க. அடக்கம் செய்த இரவு கேட்டீங்களா அத்தா! யானை அதுடைய பாகன் பக்கீருடைய கனவுல வந்து சொல்லிச்சு. பக்கிரி! நீஅழாதேப்பா,நான் மௌத்தாவல்லெ.இந்த குழிக்குள்ளே மறைவாக இருக்கிறேன். என்னை தேடிவருபவர்களின் நேமிசத்தை நிறைவேற்றிக் கொடுப்பேன்.என்னை கூப்பிடுப வர்களுக்கு பதில் சொல்வேன். நீ என்னை விட்டு எங்கும் போகவேண்டாம்.’ தினமும் ஆண்களும் பெண்களுமாக இப்ப எல்லா ஜாதியிலிருந்தும் மக்கள் குவிந்த வண்ணமாக இருக்காங்க. பல கறாமத்துகளும் நடக்குது. அவர் சொல்லி முடிக்குமுன் எனக்கு ஒரு தடவை ஒரு நாளிதழில் இங்குள்ள பெரிய பள்ளிவாசல் யானை இறந்த செய்தி வாசித்தது நினைவுக்கு வந்தது.யானையைத்தூக்கிப் புதைக்க ஆளில்லாம மூன்று தினங்கள் கிடந்ததும் துர் வாடையால் யாரும் பக்கத்தில் செல்லாததும் பிறகு ஒரு டிராக்டரில் கெட்டி இழுத்துப் புதைத்ததும் நினைவுக்கு வந்தது. ‘இந்த அறிவிலிகளான மக்களை என்ன சொல்வது? இவர்கள் மத்தியில் ஒரு மனிதனாக வாழ்வதைவிட மாண்டுவிடுவது எவ்வளவு மேலானது’ என் கையிலிருந்த யானை அவ்லியாவின் போட்டோவை கிழித்து வீசினேன்.கடைக்காரன் என்னை சுட்டு எரிக்கும் படியா பார்த்தான்.அவனுடைய பார்வையின் நெருப்பு தட்டாமல் விலகிக் கொண்டேன். பாவம்! எனது மனைவியும் எனது எனது பிள்ளைகளும் அறிவார்களா? இந்தக் கப்ருக் குழியில் ஒரு வருடத்திற்கு முன் அடக்கம் செய்த யானையின் இற்றுக் கொண்டிருக்கும் எலும்புத்துண்டுகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றனவென்று! உடனே ஓடிச்சென்று உள்ளே பக்தியாக யாஸீன் ஓதிக்கொண்டிருந்த மனைவி பிள்ளைகளை இழுத்து வந்து, அழுகிப்போன யானையின் கதையைக் கூறி படித்த நாம், முட்டாள்களின் சொல்லைக் கேட்டு எவ்வளவு பெரிய மோசம் போயிம்டோம. பார்த்தீங்களா? இந்த அவ்லியாக்களின் கதைகளெல்லாம் அண்டப்புளுகுகள்! வயிற்றுப் பிழைப்பிற்காக மக்களை முட்டாள்களாக்கி இஸ்லாத்திற்கே விரோதமான செயல்களைச் செய்து வயறு வளர்த்து வருகிறார்கள். ”யானை, குதிரை,கழுதைகளுக்கெல்லாம் தர்ஹாக்களை எழுப்பி இஸ்லாத்தையே மாசுபடுத்துகிறார்களே! இனிமேல் இந்த தர்ஹாக்கள் பக்கமே தலை வைத்துப் படுக்கக்கூடாது என என் ஆத்திரத்தையெல்லாம் வழிநெடுகக் கொட்டித் தீர்த்தேன்” என்று தன் யானைக் கதையைந் கூறி முடித்தார். அல்லாஹ், ‘ என்னிடமே கேளுங்கள். நான் உங்களுக்கு பதிலளிக்கிறேன். நீங்கள் கேட்பதையெல்லாம் நான் தருகிறேன்’ எனக்கூறியதை மறந்து விட்டு நாம் அழுகிப்போன யானைகளுக்குப் பின்னாலும், செத்துப்போன கழுதைகளுக்குப் பின்னாலும் போய் ஐந்தறிவு படைத்த மிருகங்களிடம் சென்று பகுத்தறிவுள்ள நாம் நம் தேவைகளைக் கேட்பது எவ்வளவு பெரிய அறிவீனம்! எவ்வளவு பெரிய முட்டாள்தனம்!? சமுதாயமே சிந்தித்துப்பார். ஒவ்வொரு அவ்லியாக்களின் பின்னாலும் இப்படித்தான் அழுகிப்போன கதைகள் மறைந்துள்ளன என்பதை எண்ணிப்பார்த்து நம் சமுதாயம் திருந்த வேண்டாமா? அறிவுக்கேற்ற மார்க்கம் என உலகே வியந்து போற்றும் போது அதனை நாம் நிரூபிக்கவேண்டாமா? பகுத்தறிவு பேசும் இஸ்லாத்தின் தன்மானத்தை காக்கவேண்டாமா? அழுகிப்போன யானைகளுக்கும் கருகிப்போன கழுதைகளுக்கும் பின்னால் போகலாமா? !!

உம்ரா செல்ல அரிய வாய்ப்பு

Unknown | 17:46 | Be the first to comment!

IIT Scholarship Program

Unknown | 17:37 | Be the first to comment!

IIT Scholarship Program
Header

Assalamu 'alaykum wa rahmatullahi wa barakathuhu

MS EDUCATION ACADEMY along with RAHMANI-30 Introduces ISP (IIT Scholarship Program) for deserving IIT aspirants exclusively for minorities in different cities.

FREE COACHING, HOSTEL FACILITY & 1000/Rs Stipend per month.

WRITE SCREENING TEST FOR ADMISSION ON 29th APRIL 2012, between 10:00am to 01:00 pm.

The test will be in Maths, physics, chemistry & logical reasoning.

For Registrations contact:

Mr. Abdur Rahman
9842511589
UNITED WELFARE ORGANISATION
10/39, 1ST Floor, Anaikar Complex
M.V. Badran Street,
Periamet , Chennai-03
Ph: 044-42041130

Friday 13 April 2012

ஏழு நிலைகளை நீங்கள் அடைவதற்கு முன் நற்செயல்களைக் கொண்டு முந்திக்கொள்ளுங்கள்

Unknown | 21:17 | Be the first to comment!

ஏழு நிலைகளை நீங்கள் அடைவதற்கு முன் நற்செயல்களைக் கொண்டு முந்திக்கொள்ளுங்கள்.
1- மறதியில் ஆழ்த்தும் வறுமை,
2- அநீதியிழைக்கத் தூன்டும் செல்வம்,
3- உடலில் கெடுதலை உண்டாக்கும் நோய்,
4- சொல்லை பலவீனப் படுத்தி விடும் முதுமை,
5- விரைந்து வரும் மரணம்,
6- தஜ்ஜாலின் வருகை,
7- இறுதி தீர்ப்பு நாள்,
என்று இதைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹூரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: திர்மிதி 





The Prophet (sallallahu `alayhi wa sallam), used to call on Muslims to take the initiative to do good deeds before any obstacles arise. For instance, he said, "Lose no time to do good deeds before you are caught up by one of seven calamities awaiting you: a starvation which may impair your wisdom; a prosperity which may mislead you; an ailment which may damage your health; an old age which may harm your senses; a sudden death; the Dajjal (Antichrist); or Doomsday, which is indeed the hardest and most bitter." [at-Tirmidhi, al-Baihaqi

Make hay while the sun shines

Unknown | 20:28 | Be the first to comment!

All I have to say is all what you know already, to confirm what you already know, the message of the Prophet (Sallallahu alaihi wa sallam) as given by God - the Religion of Truth. As human beings we are given a consciousness and a duty that has placed us at the top of creation. Man is created to obey God on earth and serve humanity, and it is important to realize the obligation to rid ourselves of all illusions and to make our lives a preparation for the next life. Anybody who misses this chance is not likely to be given another, to be brought back again and again, because it says in Qur'an that when man is brought to account, he will say, "O Lord, send us back and give us another chance." The Lord will say, "If I send you back you will do the same." So, take heed dear brothers and sisters.

 

Shell Programming Copyright © 2012 Shell Programming theme is Designed by Abusittik, Shell Programming